ஸகாத்தின் முக்கியத்துவம்"&ஜக்காத், ஸதகா – என்ன வேறுபாடு?

"
ஜக்காத், ஸதகா – என்ன வேறுபாடு?
ஜக்காத் என்பது ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து இஸ்லாமிய ஷரீஅத் வரையறுத்துள்ளபடி குறிப்பிட்ட சிலருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஒரு இறை வணக்கமாகும்.
ஸதகா என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் படி கடமையாக இல்லாவிட்டாலும் ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து பிறருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஓர் இறை வணக்கமாகும். சில சமயங்களில் கடமையான ஜக்காத்தும் ஸதகா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
ஸகாத்தின் பொருள்
இதன் பொருள் தூய்மையுறச்
செய்தல் என்பதாகும். ஒருவன் தன் உடைமைகளிலிருந்து நாற்பதில் ஒருபகுதியை எடுத்து ஏழைகளுக்கு அறம் செய்வதன் மூலம் அவனிடம் எஞ்சியுள்ளவை தூய்மை பெறுவதாலும், அவனுடைய உள்ளமும் உலோபித்தனத்திலிருந்து தூய்மை பெறுவதாலும் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது
ü  ஸகாத்தின் நோக்கம் என்ன ?
செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது  சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும். இதுவேபொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது. இதைத்தான் அருள்மறை அல்-குர்ஆன் பின் வருமாறு இயம்புகிறது
  مَّا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنكُمْ ۚ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); 59:7. 
ஸகாத்தின் விதிகள் என்னென்ன?
1) ஸகாத் பொருள் தனக்கு உரியதாக இருக்க வேண்டும்.
2) அளவு (நிஸாப்) முழுமை பெறவேண்டும்.
3) ஓராண்டு காலம் நிறைவு பெறவேண்டும்.
4) (கடன்கள் இல்லாமலிருக்க வேண்டும்.
5) சொந்த தேவைகள் போக மீதயிருக்க வேண்டும்.)
ஸகாத் கொடுப்பதற்கு கடமைப்பட்டோர் யார் ?
ஸகாத் வரி குறிப்பிட்ட அளவு (நிஸாப்), பொருள் படைத்த ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் இஸ்லாம்விதியாக்கியுள்ளது. தொழுகை நோன்பு, ஹஜ்ஜு போன்ற வணக்கங்களில் சிறுவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதோருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவது போல் ஸகாத்தில் விதிவிலக்கு வழங்கப்படவில்லை.அவர்களிடம்குறிப்பிட்ட தொகை இருந்தால் அவர்களின் பொறுப்பாளர்கள்,அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று வழங்கியாகவேண்டும். ஏனெனில் இது ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உரிமையாகும்.
ஸகாத் விதியானோர் ஐந்து பேர்
1.   முஸ்லிமாக இருத்தல்
2. சுதந்திரமானராக இருத்தல்
3. நிஸாபை அடைதல் (85 கிராம் தங்க மதிப்புடைய பொருளைப் பெறுதல்)       4. பொருளுக்கு உரியவராக ( Owner) இருத்தல்.
5. விளை பொருளைத்தவிர அனைத்தும் ஓராண்டு பூர்த்தியாகுதல் இத்தகுதிகளைப்பெற்ற அனைவரும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
2.   ஜகாத்  மாற்றுமத  சகோதர்களுக்கு கொடுக்கலாமா, புதியதாக  இஸ்லாம் மாறியவர் அவர் உறவினர்ர்களுக்கு கொடுக்கலமா? 
3.   ஜகாத் பெறத் தகுதியுள்ளவர்கள் யார் யார்?
 

.

உலகில் தேவையுள்ளவர்கள் என்று ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தரத்திலிருப்பவர்களல்ல. இவர்களில் நிரந்தர தேவைக்குட்பட்டவர்கள்,
 தற்காலிக தேவையுள்ளவர்கள் என்று வேறுபடுவார்கள். பொருள் வசதியற்றவர்கள் மட்டும் தான் தேவையுடையவர்கள் அந்த வசதியைப் பெற்றவர்களுக்கு எந்த தேவையும் இருக்காது என்றெல்லாம் இஸ்லாம் முடிவு செய்யவில்லை. என்னதான் பொருளாதார வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் சூழ்நிலையால் சில நேரம் அவர்கள் கூட தேவையுள்ளவர்களாகி விடலாம் என்பதால் ஜகாத் பெற தகுதியானவர்களை இஸ்லாம் மிக விரிவாக பட்டியலிட்டுள்ளது.

யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் ?  8 பிரிவினர்)
   إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

1)யாசிப்போர் (ஃபக்கீர்)
2) ஏழைகள் (மிஸ்கீன்)
3) ஸகாத் வசூலிப்போர்.
4) இஸ்லாத்தை தழுவ விரும்புவோர்.
5) அடிமைகளை விடுதலை செய்வதற்காக!
6) கடன்பட்டோர்.
7) இறைவழியில் அறப்போர் செய்வோர்.
8) பயணிகள் (வழிப்போக்கர்)
(இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்( அல்-குர்ஆன் 9:60 )
4)யார் யாருக்கு கொடுககக்கூடாது ?
1) வசதியுள்ளோர்.
2) உடல் வலிமை பெற்றோர்.
3) தனது பெற்றோர்.பிள்ளைகள் ( அல்-அஸ்லு வல்ஃபர்உ)
4) நபியின் குடும்பத்தினர்.
5) முஸ்லிமல்லாதோர்.
6) தீயவர்கள்.
எப்போது வழங்க வேண்டும் ?
இது ரமளானில் தான் வழங்கவேண்டுமென பலரும் எண்ணிக்கொண்டு அம்மாதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாம் அவ்வாறு குறிப்பிடவே இல்லை.
பின் எப்போது கொடுக்க வேண்டும் ?
ஒருவருக்கு உணவு,உடை, வீடு, வாகனம், தொழிலுக்குத் தேவையான பொருட்கள் (கருவிகள்) போன்றஅவசியத் தேவைகள் போக ஒருகுறிப்பிட்ட அளவு அல்லது அதற்கு மேல் செல்வமிருந்தால் கணக்கிட்டு நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் கொடுக்கவேண்டும்.
அதுவும் குறிப்பிட்ட அளவை (நிஸாபை) பெற்றவுடன் அல்ல.               அந்த தொகை ஒர் ஆண்டு முழுவதும் அவனிடம் இருந்து, ஆண்டு இறுதியில் கொடுத்தால் போதுமானது.
எந்த அளவுக்கு ஸகாத் வழங்கவேண்டும் ?
20 தீனாருக்கு குறைவானவற்றில் ஸகாத் கடமையில்லை.             20தீனார்கள் ஓராண்டு முழுவதும் உம்மிடமிருந்;தால் அதற்கு நீர் ஸகாத் கொடுக்க வேண்டும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : அஹ்மது, அபூ தாவூது, பைஹகீ)     மேற் கண்ட நபி மொழியில் 20 தீனார் அளவு அல்லது அதற்கு மேற்பட்ட அளவு வைத்திருப்போர்தான் ஸகாத் கொடுக்க கடமைப்பட்டுள்ளனர். என்பது தெரிய வருகிறது.
நபிகள் நாயகம் காலத்தில் செல்வம் என்பது தங்க வெள்ளி நாணயங்களாகவோ, கால்நடைகளாகவோ சொத்தாகவோ இருந்தது. இப்போதுள்ளது போல் விலையுயர்ந்த வைரங்கள், பிளாட்டினங்கள் இருந்ததில்லை. கரன்ஸி நோட்டுகள் இருந்ததில்லை. தங்கத்தின் மதிப்பை வைத்தே நோட்டுகள் அச்சடிக்கப் படுவதால் தங்கத்தின் விலையையும் வைத்தே இன்று அனைத்தையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஸகாத் கடமையான பொருட்கள்:
ஸகாத் ஐந்து வகை பொருட்கள் மீது கடமையாகிறது:
1) தங்கம், வெள்ளி,
2) வியாபாரப் பொருட்கள்
3) கால் நடைகள்                                                            4) விவசாய விளைச்சல்கள்
5) புதையல்கள்
ஸகாத்தின் சதவிகித அளவுகள்
1. 2.5 (இரண்டரை)சதவிகிதம்
2. 5 சதவிகிதம்
3. 10 சதவிகிதம்
4. 20 சதவிகிதம் என பொருளின் இனம் மாறுபடும் போது சதவிகிதமும் மாறு படுகிறது.இனி இவற்றை விரிவாகாப் பார்ப்போம்.
1. இரண்டரை சதவிகிதம் ஸகாத்
1. தங்கம்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வழக்கிலிருந்த ஒரு தீனார் தங்க நாணயத்தின் மதிப்பு இன்றைய மெட்ரிக் அளவில், 4..25 கிராமாகும். 20 தீனாருக்கு 85 கிராம் தங்கத்தின் அளவாகும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு 20 மித்கால் (தீனார்) தங்கத்துக்கும் அரை மித்கால் தங்கத்தை( அதாவது 40ல் ஒரு பாகத்தை) ஸகாத்தாக எடுப்பார்கள். ( இப்னு மாஜா)
யாரிடமேனும் தமது அத்தியாவசியப் பொருட்களான உணவு,உடை, உறையுள்,தொழிற் கருவிகள்போக 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ ஓராண்டு முழுவதுமிருந்தால்அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை சதவிகிதம்- ஸகாத் கொடுத்தாக வேண்டும்.
உதாணமாக ஒருவரிடம் 100 கிராம் தங்கம் ஓராண்டு முழுவதும் இருந்தால் அதில் இரண்டரை கிராம்(இரண்டரை சதவிகிதம்) -தங்கத்தை அல்லது அதற்கு இணையான விலையை ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.
வருடத்துவக்கத்தில் 100 கிராமிருந்து பின்னர் தன் தேவைக்கு ஒரு 10 கிராமை எடுத்துச் செலவு செய்து விட்டால் வருட இறுதியில் எஞ்சிய 90 கிராமுக்குரிய ஸகாத்தை வழங்க வேண்டும்.
2. வெள்ளி நகைகள், வெள்ளிப் பாத்திங்கள், வெள்ளிக் காசுகள் போன்றவற்றிற்கும் ஸகாத் வழங்கப்பட வேணடும்.200 திர்ஹமோ அதைவிடக்கூடுதலோ வெள்ளிக்காசுகள் வைத்திருப்போர் மீது ஸகாத் கடமையாகும்.ஐந்து ஊக்கியா (ஒரு ஊக்கியாh 40திர்ஹம்.40ஓ5ஸ்ரீ200 திர்ஹம்) அளவை விடக்குறைந்த வெள்ளிக்காசுகளுக்கு ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரிய்யி (ரலி), புகாரி : 1447)
200 திர்ஹம் (வெள்ளி) இருக்கும் போது அதில் ஐந்து திர்ஹம் ஸகாத் கொடுக்க வேண்டும்..
மேற்கூறிய ஹதீஸிலிருந்து 200 திர்ஹத்திற்கு குறைவான எடைக்கு ஸகாத் கிடையாது எனத் தெரிகிறது.இன்றைய மெட்ரிக் எடையில் ஒரு திர்ஹத்திற்கு 595 கிராம் ஆகும். 200 திர்ஹத்திற்கு(200ஒ2.975) 595 கிராம் ஆகிறது. தனது அவசியத்தேவை போக ஒருவரிடம் ஓராண்டிற்கு 595 கிராம் அல்லது மேற்பட்டுவெள்ளியிருந்தால் (40 ல் ஒரு விகிதம்) இரண்டரை சதவீதம் (அதாவது 14.875 கிராம்) ஸகாத் வழங்க வேண்டும்.
3. நகைகள்; தங்க வெள்ளி நகைகளில் அணிந்திருக்கும் நகைகளுக்கு ஸகாத் உண்டா என அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் காணப்;பட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் ஸகாத் கொடுக்க வேண்டுமெனகீழுள்ள ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.
இருபெண்கள் தங்கக் காப்புகள் அணிந்து பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது உங்களிருவருக்கும் மறுமை நாளில் நெருப்புக் காப்புகள் அணிவிக்கப்படுவதை விரும்புவீர்களா ? என அவர்களிடம் கேட்டபோது விரும்பமாட்டோம் என பதில் கூறினர். அவ்வாறாயின் உங்கள் கைகளில் அணிந்திருப்பவைகளுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடுங்கள்; என நபி (ஸல்) எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ருப்னு சுகைபு (ரலி), ஆதாரம்: இப்னு ஹஸம்
நானும் எனது சிறியதாயாரும் தங்கக்காப்புகள் அணிந்து கொண்டு நபிபெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.அப்போது இதற்கு ஸகாத் கொடுத்து விட்டீர்களா ? எனக்கேட்hர்கள். இல்லை என்றோம்.நரக நெருப்பை உங்கள் கரங்களில் அல்லாஹ் அணிவிப்பதைப்பற்றி உங்களுக்கு அச்சமாக இல்லையா? இதற்கான ஸகாத்தைச் செலுத்திவிடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அஹ்மத்
நான் வெள்ளி மோதிரங்கள் அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டனர். இதற்குரிய ஸகாததைச்செலுத்திவிட்டாயா? ஏன்று கேட்டனர். இல்லையென்றேன்.அவ்வாறாயின் இதுவே உன்னை நரகிற்சேர்க்கப்போதுமானதாகும். என்று ஏந்தல் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ
மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தங்க வெள்ளி நகைகளுக்கும் ஸகாத் உண்டு என்பதை நபி(ஸல்)அவர்கள் வலியுறுத்துவதைக் காணலாம்.(தங்கம், வெள்ளிக்குரிய மதிப்பீட்டை அன்றைய மார்கெட் நிலவரப்படி கணித்துக்கொள்ளவேண்டும்) ஆண்டுதோறும் கொடுக்கவேண்டுமா?ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஸகாத் கொடுத்தால் போதுமானது. ஆண்டு தோறும் கொடுக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை பரவலாகக் காணமுடிகிறது. இவர்கள் முன்வைக்கும் வாதத்தையும் ஆதாரஙடகளையும் பின்னர்காண்போம்.
எனினும் ஆண்டு தோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமென்றே பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் அவர்களின் பின்னர் வந்த கலீபாக்கள்காலத்திலும் ஆண்டு தோறும் வசூலித்து வந்துள்ளதைக் காணமுடிகிறது.
நபிகளாரின் காலத்திலும் குலபேயே ராசிதீன்கள் காலத்திலும் ஸகாத் வசூலிப்பதற்காக வருடந் தோறும் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். எந்த நாயகத் தோழரும் அவ்வாறு கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்க வுமில்லை. இதை வைத்தே உலகின்பெரும்பாலான அறிஞர்கள் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமெனத் தீர்;ப்பு வழங்கியுள்ளனர்.
ஸவூதி அரேபியாவின் மிகப்பெரும் மார்க்க மேதைகளான அஷ்ஷைகு பின் பாஸ் (ரஹ்) அவர்களும், ஸாலிஹ்அல்-உதைமீன் (ரஹ்) போன்றவர்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.
(மேற்கோண்டு விளக்கத்திற்கு தொடர்-2 கட்டுரையைப்பார்க்க)
4. ரூபாய்கள் 85 கிராம் தங்கத்திற்கு நிகரான வகையில் கரன்ஸிநோட்டுகள் குறிப்பிட்ட காலஅளவு நம்மிடமிருந்தாலும்வங்கியிலிருந்தாலும் அதற்கான ஸகாத்தையும் நாம் கணக்கிட்டு கொடுத்து வரவேண்டும்.
5. வியாபாரப் பொருட்கள்
வியாபாரத்திற்கு வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருப்பினும் அதற்கு கட்டாயம் ஸகாத் வழங்கியேஆக வேண்டும்.ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-நாங்கள் வியாபாரத்திற்கென வைத்திருக்கும் பொருட்களுக்கு ஸகாத் வழங்க வேண்டுமென நபி ( ஸல் )அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆதாரம் : அபூ தாவூது, பைஹகீ
மூலதனத்திற்கும் மட்டும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்க வேண்டுமா? என்று பலரும் கேட்கின்றனர். மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்கவேண்டும் என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.ஆதாரம்: உமர் (ரலி) அவர்கள் ஆடுகளைப் பெற்றிருந்த ஒருவரிடம் அதற்குரிய ஸகாத்தை கேட்டபோதுஅவை ஈன்ற குட்டிகளை விட்டு விட்டு ஸகாத் கொடுக்க முன் வந்தார். அப்போது அதற்குரிய குட்டிகளையும்கணக்கில் சேர்ப்பீராக! என அவர்கள் கூறிய செய்தி இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் முவத்தாவில் இடம் பெற்றிருக்கிறது. இதை ஆதாரமாகக் கொண்டு வியாபாரத்தில் இலாபமாகப்பெற்ற தொகைக்கும் சேர்;த்தே ஸகாத்தை கணக்கிடவேண்டும் என்பதை அர்ரவ்லுல் முரப்பஃ ஸரஹ் ஸாதுல் முஸ்தக்னஃ பாகம்4,பக்கம்17ல் குறிப்பிடப்பட்டுள்ளது.)
1) ஒருவர் பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து ஜனவரிமாதம் ஒரு வியாபாரத்தைத் தொடங்குகிறார் என்றுவைத்துக்கொள்வோம்.ஓராண்டு முடிந்து அடுத்த ஜனவரியில் கணக்குப்பார்க்கும்போது வியாபாரம் வளர்ந்து செலவு சம்பளம் போக 5 இலட்ச ரூபாய் அதிகமிருக்கிறது. இப்போது மூலதனமாகிய ரூ10இலட்சத்துக்கும் ஓராண்டுக்குப்பிறகு இலாபமாகக் கிடைத்த 5 இலட்சத்துக்கும் சேர்த்து 15இலட்சத்துக்கு இரண்டரைசதவீதம்(அதாவது 37,500 ரூபாய் ) ஸகாத் கொடுக்க வேண்டும். மூலதனமாகிய 10 இலட்ச ரூபாய்க்கு மட்டும் கொடுத்தால் போதுமானது என்பதற்கு ஆதாரமில்லை.
2) பிறருடைய பொருள் நம் பொறுப்பில் இருந்தாலும் அது ஸகாத்துடைய அளவை அடைந்து ஓராண்டு முழுமையாகநம்மிடம் இருந்து விட்டால் ஓரராண்டுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடவேண்டும். அந்தப் பொருளை ஸகாத்துடைய காலவரையை அடைவதற்கு முன் திருப்பிக் கொடுத்து விட்டால் அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.
3) அது போல நாம் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன் தொகை நம்மிடம் ஒருவருடம் இருந்துவிட்டாலும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து விடவேண்டும். ஸகாத் காலவரைக்கு முன்னர் திருப்பிச் செலுத்திவிடடால் ஸகாத் செலுத்த வேண்டியதில்லை.
கடன் தொகை
4)சதாரணக் கடனாகட்டும். வியாபாரக் கடனாகட்டும். கடன் கொடுத்த தொகை கண்டிப்பாக வரும் தொகையும் உண்டு. வராதவையும் உண்டு. கண்டிப்பாக வரும் தொகைக்கு அந்த ஆண்டே கணக்கிட்டு ஸகாத் கொடுத்து விடவேண்டும். வராத தொகைக்கு கையில் கிடைத்ததும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டு கொடுத்து விடவேண்டும். பலஆண்டுகள் சென்று இந்த கடன் தொகை கிடைப்பதாக இருப்பின் அவற்றிற்கு அண்டு தோறும் என்ற கணக்கில்லாமல் ஒரேஒரு தடவை மொத்தத் தொகைக்கும் கொடுத்தால் போதுமானது.
6. வங்கியில் போடும் வைப்பு நிதி,, குறித்த கால வைப்பு நிதியும் சேமிப்புப் பத்திரம் நிறுவனப்பங்குகள் அவை கைவசமிருக்கும் பணமாகக் கருதி ஒரு வருடம் பூர்த்தியானதும் ஆண்டுதோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும்.
7. சொந்த வீடுகள், வாடகை வீடுகள் நாம் குடியிருக்கும் வீட்டிற்கு ஸகாத் கிடையாது. ஆயினும் வாடகைக்கு விடப்படும் வீடுகளில் வரும் வருமானத்திற்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
8. கடைகள், விடுதிகள் (லாட்ஜுகள்) வாடகைக்கு விடப்படும் கடைகள்,கட்டடங்கள்,விடுதிகள்(லாட்ஜுகள்) ஆகியவற்றிற்கும் ஸகாத் கிடையாது.அதில் வரும் வாடகைக்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
9. நிலங்கள், வீட்டு மனைகள்விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் ஆகியவற்றுக்கும் ஸகாத் இல்லை. ஆனால் அவற்றிலிருந்து வரும் வருவாய்க்கும், விற்பனை செய்வதாக இருந்தால் அதன் மதிப்புத் தொகைக்கும் இரண்டரை சதவீதம் ஸகாத் கடமையாகும். இவை வியாபாரச் சரக்குகளைப்; போன்றவையாகும்.
10. வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள்வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பீட்டிற்கு ஸகாத் இல்லை. ஆனால், அவற்றின் வருமானத்திற்கும் வாடகைக்கும் ஸகாத் உண்டு.
பொதுவாகவே மேற்கூறிய அனைத்திற்கும் அவற்றின் மொத்த மதிப்பீட்டிற்கு-அஸலுக்கு ஸகாத் கிடையாது. அவற்றின் வருமானத்திற்கும், அவற்றை விற்கும் போதும் தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.
11. கால் நடைகள் கால் நடைகளில் ஆடு, மாடு, ஒட்டகை மனித வாழ்வுக்கும் ஒரு நாட்டின் வளத்திற்கும் வருவாய்க்கும் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. அவற்றின் பாலும் மாமிசமும் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவை. அதன்தோல், உரோமம், கொம்பு ஆகியவை பெருமளவில் அந்நியச்செலாவணியைப் பெற்றுத்தருகிறது. பயணம் செய்வதற்கும் பயன்படுகின்றன. இவ்வாறாக மனிதத் தேவைகளுக்கும் பொருளாதார வளத்திற்கும் பயன்தரும் இந்த கால் நடைகளை சிறப்பித்து திருமறையில் வரும் 43:12, 16:5,7 வசனங்கள் சிந்தனைக்குரியதாகும், எனவே இறைவன் வழங்கிய இந்த அருட்கொடைகளுக்கு ஸகாத் வழங்குவது கடமையாகும். நம் நாட்டைப் பொறுத்தவரை ஸகாத் கொடுக்குமளவுக்கு யாரும் கால்நடைகள் வைத்திருப்பதில்லை.
எனினும் அதன் விபரத்தை சுருக்கமாகக் காண்போம்.
ஸகாத் விகிதங்கள் கால்நடைகள் எண்ணிக்கை ஸகாத் இல்லை ஸகாத் கொடுக்க வேண்டும்.
1. ஆடுகள்
1 முதல் 39 வரை ஸகாத் இல்லை
40 முதல் 120 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
121 முதல் 200 வரை ‘ ‘ இரண்டு ஆடுகள்
201 முதல் 399 வரை ‘ ‘ மூன்று ஆடுகள்
400, அதற்கு அதிகமுள்ளதற்கு ஒவ்வொரு 100 க்கும் ஒரு ஆடு அதிகம் வழங்கவேண்டும். (புகாரி ஹதீஸ் எண:;1454))
(வெள்ளாடு,செம்மரியாடு,ஆண்-பெண் ஆடுகள் யாவும் சமமாகும்)
2. மாடுகள்
1 முதல் 29 வரை ஸகாத் இல்லை (எருமைகள);
30 முதல் 39 வரை ——- ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்று
40 முதல் 59 வரை ——- 2 வருடம் ‘ ‘ ஒரு கன்று
60 அல்லது அதற்குமேற்பட்டதற்கு ஓவ்வொரு 30 மாடுகளுக்கு ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும் ஓவ்வொரு 40 மாடுகளுக்கு இரண்டு ஆண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும்
3. ஒட்டகைகள்
1 முதல் 4 வரை ஸகாத் இல்லை
5 முதல் 9 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
10 முதல் 14 வரை ஓராண்டு நிறைவு பெற்ற இரண்டு ஆடுகள் 15 முதல் 19 வரை ஓராண்டு நிறைவு பெற்ற மூன்று ஆடுகள்
20 முதல் 24 வரை ஓராண்டு நிறைவு பெற்ற நான்கு ஆடுகள்
25 முதல் 35 வரை ஓராண்டுநிறைவுபெற்ற ஓர் பெண் ஒட்டகம்;
36 முதல் 45 வரை இரு வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
46 முதல் 60 வரை 3 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
61 முதல் 75 வரை 4 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம
76 முதல் 90 வரை 2வருடம்நிறைவுபெற்ற 2 பெண் ஒட்டகங்கள்
91 முதல் 120 வரை 3 வருடம்நிறைவுபெற்ற2 பெண் ஒட்டகங்கள
ஒவ்வொரு 40 க்கும்ஒவ்வொரு 50 க்கும் 2 வருடம் நிறைவுபெற்ற 1 பெண் ஒட்டகம் 3 வருடம்நிறைவுபெற்ற 1 பெண்xட்டகம்
குதிரைக்குரிய ஸகாத் வியாபாரப்பொருளைப்போன்றதாகும். சொநத உபயோகத்திற்கு ஸகாத் கிடையாது. வியாபாரத்திற்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
2) 5 சதவிகிதம் ஸகாத்
12. தானியங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தானியங்களில் கோதுமை மட்டுமே விவசாயம் செய்யப்பட்டுவந்தன. வேறு தானியங்களும் அப்பகுதிகளில் உற்பத்தியாகவுமில்லை. ஆயினும் நெல், சோளம், ரவை, ராகி கிழங்கு போன்ற உணவு வகை எதுவாயினும் கோதுமையைப் போன்று கணக்கிட்டு ஸகாத் கொடுக்க வேண்டும்.எனினும் முன்னர் நாம் குறிப்பிட்ட பொருள்களின் ஸகாத்திலிருந்து இவை மாறுபடுகின்றன. தங்கம் வெள்ளி வியாபாரப் பொருட்களுக்கு ஆண்டு தோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும். ஆனால் தானியங்களைப் பொறுத்தவரை அவ்வாறன்று. விவசாயம் செய்து விளைந்து அறுவடை செய்யும் காலங்களில் அதற்குரியஸகாத்தை கணக்கி;ட்டுக் கொடுக்க வேண்டும்.
3) 10 சதவிகிதம் ஸகாத்
(உற்பத்தியில் 5 சதவிகிதம்)
நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்து விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதம் ஸகாத்கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் ஒருபங்கு (1ஃ20) கொடுக்க வேண்டும்.)
உற்பத்தியில் 10 சதவிகிதம் நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்படாமல் விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் இரு பங்கு (2/20) கொடுக்க வேண்டும்.) அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி
ஓராண்டு முடிவடைய வேண்டும் என்பதில்லை.அறுவடையான உடனேயே கொடுத்து விடவேண்டும் இங்கேகவனிக்கத்தக்கதாகும். அதற்குரிய உரிமையை அறுவடை நாளிலேயே கொடுத்;து விடவேண்டும் என அல் குர்ஆன் (6:141) அறிவுரை பகர்கிறது.
தானியங்களுக்குரிய அளவு (நிஸாப்)
கோதுமைதானியங்களுக்கும் ஒரு வரையறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்;துள்ளார்கள்;.’ ஐந்து வஸக்’ அளவுக்குக் குறைவான உற்பத்திக்கு ஸகாத் கிடையாது என நபி ( ஸல் )அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூது, தீhமிதி,நஸயீ, இப்னு மாஜா,தாரமீ, முஅத்தா, அஹ்மத்.
எனவே, ஒரு வஸக் என்பது 60 ஸாவு ஆகும் ஒரு ஸாவு 2.5 மப (இரண்டரை கிலோ) ஃ 5 வஸக் 5ஒ60ஸ்ரீ 300 ஸாவு 300 ஸாவு (300ஓ2.5 மப ஸ்ரீ) 750 கிலோவாகும் .
750 கிலோ கோதுமை உற்பத்திக்கே ஸகாத் வழங்கப்படவேண்டும். அதற்கு குறைந்த அளவுக்கு ஸகாத்வேண்டியதில்லை. ஒரு வருடத்தில் பல முறை உற்பத்திச் செய்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த அளவுவிளைச்சலுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.
நெல் கோதுமையைப் பொறுத்த வரை அப்படியே அரைத்து மாவாக்கி உணவாக உட்கொள்ள முடியும்..ஆனால் நெல்லைப் பொறுத்தவரை அதன் மேல் தோலான உமியை நீக்கிய பிறகே உண்ணுவதற்கு ஏற்றதாகும். ஆகவே. நெல்லுக்கு ’10 வஸக்’ ( 1500 மப) உற்பத்தியானால் தான் அதற்கு ஸகாத் உண்டு என மார்க்கஅறிஞர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். தண்ணீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்பட்டிருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதமும் தண்ணீர் பாய்ச்சுவதற்காகசெலவு செய்யப்படாமலிருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதமும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
நிலத்திலிருந்து உற்பத்தி யாகும் பொருட்களுக்கு மட்டுமே ஸகாத் கடமையாகும். நிலம் எவ்வளவு இருந்தாலும்நிலத்திற்கு ஸகாத் கிடையாது.
13. பேரீத்தம் பழம் , உலர்ந்த திராட்சை இந்த இரண்டும் அறுவடை செய்த உடனேயே ஸகாத் கொடுக்க வேண்டும். இவை தவிர எந்த பழவகைகளுக்கும் ஸகாத் கிடையாது.
14. காய்கறிகள்காய்கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படுமேயாhனால் அவற்றின் ஸகாத்காலமும் அளவும் நிறைவு பெற்றால் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டும்.
4) 20 சதவிகிதம் ஸகாத்
15. கனிமப் பொருள், சுரங்கப்பொருள்சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் உலோகங்கள், கனிமப் பொருட்கள், பூமியிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற புதையல்கள், போரில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் (கனீமத்) பொருட்கள் ஆகியவற்றிற்கு 20 சதவிகிதம் ஸகாத் வழங்ப்படவேண்டும்.
முக்கியக் குறிப்பு :
1. வைரக்கல், பிளாட்டினம் பல  நாட்டுக்கரன்சிகள், வலையுயர்ந்த சேமிப்புப் பொருட்கள் ஆகியவற்றிற்கு ஸகாத்கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
2. ஆடு, மாடு, ஒட்டகை அல்லாத மிருகங்களுக்கும் ,பறவைகளுக்கும் ஸகாத் கிடையாது. விற்பனைக்கென்றால் ஓராண்டுநிறைவு பெற்றதும் வியாபாரப் பொருளைப்போல் இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
3. பழவகைகள், காய் கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும அதன்விலைக்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
4. மேலே குறிப்பிடப்படாத எதுவாயினும் சொந்த உபயோகத்திற்கோ, பாது காத்து வரும் எண்ணத்திலோஉள்ளவையாயின் ஸகாத் கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரைசதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
16. சில்லரையாக வினியோகித்தல்; சில்லரையாக வினியோகிப்பது ஸகாத் முறையாகாது. கடமையும் நிறை வேறாது.
17. பைத்துல் மால் பொது நிதிபைத்துல் மால் பொது நிதி ஒன்றை உருவாக்கி பணத்தை உரியவரிடமிருந்து திரட்டி ஒரு அமைப்பு முறையாக ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்குப்பயன் படும் வகையில் அவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்களுக்கு கொடுக்கும் வகையில் வினியோகிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது.
இதன் மூலமே உலகளாவிய அளவில் வறுமையை ஒழித்து ஏழைகள் ஏற்றம் பெறச் செய்து சமுதாயத்தில் வாழ்வையும் வளத்தையும் காணமுடியும். இதுவே இஸ்லாம் விழையும் ஸகாத் முழறயாகும். வல்ல நாயன் ஸகாத்தின் முக்கியத்தை உணர்ந்து அதை உரிய முறையில் வினியோகிப்பதற்கு நல்லருள் புரிவானாக.






இஸ்லாமிய மார்க்கத்தில் மத்ஹபின் பெயரால் எந்தப் பிரிவும் இல்லை! ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹன்பலி என எந்த மத்ஹபும் இஸ்லாத்தில் இல்லை! முற்கால இமாம்களின் பெயரால் உருவாக்கப்பட்ட மத்ஹபுகளுக்கும் அந்த இமாம்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பின்னாளில் தோன்றிய அறிஞர்கள் சிலர், இமாம்களின் பெயர்களைப் பயன்படுத்தி மார்க்க விளக்கம் கொடுத்ததால் இது இன்னின்ன இமாமின் சட்டம் என இமாம்களின் பெயரால் நிலைத்து, இன்றளவும் தொடர்கிறது.

நான்கு இமாம்களும் குர்ஆன், சுன்னாவைத் தான் பின்பற்றினார்கள். குர்ஆன், சுன்னா ஒளியில் சட்டங்கள் இயற்றி, மார்க்க தீர்ப்புகள் அளித்தனர். எனவே, ஹனஃபி, ஷாஃபி... போன்ற மத்ஹபுகள் இஸ்லாம் ஏற்படுத்தியதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஜகாத் எனும் கடமையான தர்மம், அதைக் கொடுப்பதற்குத் தகுதிபெற்ற ஒவ்வொரு முஸ்லிமும் அந்தக் கடமையானக் கொடையை கட்டாயம் வழங்கியாக வேண்டும். இது இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்ற முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கடமையாகும்.

தங்கத்தின் நிஸாப் نِصاب - வரம்பு 20 மிஃத்கால் ஆகும். தங்கம் இந்த அளவுக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜகாத் கடமையாகும். ஒரு மிஃத்கால் என்பது 4.374 கிராம்கள் எடை கொண்டது. 20 மிஃத்கால் (20X4.374=87.48 கிராம்கள்) சுமார் 11 சவரனுக்குச் சமம். இதில் இரண்டரை சதவீதம் சுமார் 2.187 கிராம் - கால் சவரன் தங்கத்தை ஜகாத் கொடுக்க வேண்டும். அல்லது அன்றைய சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலையை மதிப்பிட்டு கால் சவரன் எடையின் தங்கத்திற்கான ரூபாயை ஜக்காத்தாகக் கொடுக்கலாம்.

வெள்ளியின் நிஸாப் - வரம்பு 5 ஊக்கியாவாகும். ஓர் ஊக்கியா என்பது 122.472 கிராம்கள் எடை கொண்டதாகும். 5 ஊக்கியா ( 5x122.472 ) = 612.36 ~ சுமார் 615 கிராம்கள் ஆகும். இதில் 2.5 சதவீதம் - 15 கிராம் வெள்ளியை ஜகாத்தாகக் கொடுக்க வேண்டும். அல்லது அன்றைய சந்தை நிலவரப்படி வெள்ளியின் விலையை மதிப்பிட்டு 15 கிராம் எடையின் வெள்ளிக்கான ரூபாயை ஜகாத்தாகக் கொடுக்கலாம்.

(விற்பனைக்காக இல்லாத) குதிரைகளுக்காகவும், அடிமைகளுக்காகவும் ஜகாத் இல்லை என நான் தள்ளுபடி செய்துவிட்டேன். எனவே, நாற்பது திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹம் என்ற அளவில் வெள்ளிக்கான ஜகாத்தைக் கொடுத்துவிடுங்கள். நூற்றுத் தொண்ணூறு திர்ஹங்களில் (ஜகாத்) எதுவும் (கடமை) இல்லை. அவை இருநூறை அடைந்துவிட்டால் அவற்றில் ஐந்து திர்ஹங்கள் (ஜகாத்) உண்டு. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் - அலீ (ரலி) நூல் - திர்மிதீ 563)

ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த (வெள்ளியில்) ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஜகாத் இல்லை. ஐந்து வஸ்க்குக்குக் குறைந்த (தானியத்)தில் ஜகாத் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் - அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள் - புகாரி 1405, முஸ்லிம் 1780, திர்மிதீ 568, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா, முவத்த மாலிக், தாரிமீ)    

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு 20 மிஃத்கால் தங்கத்துக்கும் அரை மிஃத்கால் தங்கத்தை (40ல் ஒரு பாகத்தை) ஜகாத்தாக எடுப்பார்கள். (இப்னு மாஜா)

இரண்டரை சதவீதம்

கையிருப்பில் உள்ள தங்கமானது ஜகாத்துக்கான உச்சவரம்பை அடைந்து, தங்கம் தவிர்த்து மேலதிகமாகப் பணமிருந்தால் தங்கத்தின் விலை மதிப்புடன் பணத்தையும் சேர்த்து அந்தத் தொகைக்கான ஜகாத் மதீப்பிடு செய்யவேண்டும்.
அதாவது, ஒரு பவுன் தங்கம் 20 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். 11 பவுனுக்கு 2,20,000 ரூபாய்கள் மதிப்பீடாகும். இத்துடன் 30,000 ஆயிரம் ரூபாய்கள் கையிருப்பு ரொக்கப் பணமாக இருந்தால், எஞ்சியுள்ள அந்தப் பணத்தையும் தங்கத்தின் விலையுடன் சேர்த்தால், மொத்தம் 2,50,000 ரூபாய்களாகும். இதில் நாற்பதில் ஒன்று என்கிற கணக்கின்படி இந்த இரண்டரை லட்சத்துக்கும் நூற்றுக்கு இரண்டரை சதவீதமான 6250 ரூபாய்கள் ஜக்காத்தாகக் கொடுக்க வேண்டும்.

பெண்களின் "தேவைக்கு மேல்" உள்ள அளவு என்ன? என்று கேள்வியில் கேட்டிருப்பது போல் பெண்கள் தேவைக்கென எந்த அளவும் இல்லை. நூறு பவுன் நகைகளை அள்ளி அணிந்தாலும் அவை பெண்களின் தேவையாகத்தான் இருக்கும். ஆகவே, பெண்களின் தேவைக்குப் போக எஞ்சியுள்ள தங்கத்துக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என எவ்வித ஆதாரமும் இல்லை. ஜகாத் கொடுக்கும் அளவுக்கு தங்கம் இல்லை என்றால் தங்கத்திற்கான உச்சவரம்பை அவை அடையவில்லை. அதனால் நிஸாபுக்குக் குறைவாக இருக்கும் தங்கத்துக்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை.

தங்கம் நிஸாபை அடைந்து, அதற்கு மேலும் தங்கம் கையிருப்பில் இருந்தால் மொத்த தங்கத்தையும் கணக்கிட்டு ஸகாத் வழங்கவேண்டும். அதாவது, ஒருவரிடம் நூறு கிராம் தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் தங்கத்துக்கான உச்சவரம்பு சுமார் 88 கிராம்கள்; அல்லது 11 பவுன்கள் ஆகும். இங்கு நூறு கிராம் தங்கத்தையும் கணக்கிட்டு அதில் இரண்டரை சதவீதமான இரண்டரை கிராம் தங்கத்தை அல்லது அதற்கான கிரயத்தை ஜகாத்தாக வழங்கிட வேண்டும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

வீட்டு மனைகள், நிலங்கள், வாடகைக்கு விடப்படும் வீடுகள் கடைகள் இவற்றிற்கு ஸகாத் இல்லை. இவற்றிலிருந்து வரும் வருமானத்திற்கு மட்டும் ஸகாத் கொடுக்கவேண்டும் என்று ஒரு சாராரும், இவற்றிற்கும், இவற்றிலிருந்து வரும் வருமானத்திற்கும
 ் ஸகாத் கொடுக்கவேண்டும் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். இது குறித்து அறிஞர்களிடையே இருவித கருத்துகள் உள்ளன. நாமறிய இருவித கருத்துக்களுக்க ும் நேரடியான நபிவழி ஆதாரங்கள் இல்லை. 

ஸகாத் என்றவுடன் தங்கத்தை மட்டும் நினைத்து, தங்கத்தைக் கணக்கிட்டு ஸகாத் கொடுத்தால் போதும் என எண்ணி, மற்ற செல்வங்களைத் தவிர்த்து விடுகின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது பின்வருமாறு உரையாற்றினார்கள்,

உங்கள் இறைவனான அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்
 கள். உங்கள் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றுங்கள் . உங்கள் (ரமளான்) மாதத்தில் நோன்பு நோறுங்கள். உங்கள் செல்வங்களுக்கான ஸகாத்தை நிறைவேற்றி வாருங்கள். உங்களில் அதிகாரமுடையேருக ்குக் கட்டுப்படுங்கள் . (அப்படி நீங்கள் செய்வீர்களானால் ) உங்கள் இறைவனின் சொர்க்கத்தில் நுழைவீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் - அபூஉமாமா (ரலி) (நூல்கள் - திர்மிதீ 559 இதேக் கருத்தில் அமைந்த நபிமொழிகள் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்து புகாரி 63, முஸ்லிம் 10)

குடியிருக்கும் வீடு, உபயோகிக்கும் வாகனம், உணவு, உடைகள், தொழிற்கருவிகள் இவைபோன்ற அவசியத் தேவைக்கான பொருட்கள் தவிர, மற்றவை மேலதிகமான ''உங்கள் செல்வங்களில்'' அடங்கும். வீட்டுமனை, நிலம், வாடகை வீடுகள், வாடகைக் கடைகள் இவற்றில் முதலீடு செய்யாவிட்டால் அந்தப் பணம் ரொக்கமாகவே கையிலிருக்கும். அப்போது மேலதிகமாக கையிலிருக்கும் ரொக்கத்திற்கான ஸகாத் தொகையைக் கணக்கிட்டுக் கொடுக்கவேண்டும்
 . அதுபோல் கை வசமிருக்கும் ரொக்கப் பணத்தைக் கொண்டு அசையாச் சொத்துக்கள் வாங்கினால் அந்த செல்வங்களையும் முறையாகக் கணக்கிட்டு ஸகாத் வழங்கிட வேண்டும் என்பதே சரியெனப் படுகிறது.

மேற்கண்ட நபிமொழியில், ''உங்கள் செல்வங்களுக்கான ஸகாத்தை நிறைவேற்றி வாருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால்
 , ரொக்க ரூபாய்களாக இருந்தாலும் அசையா சொத்துக்களாக இருந்தாலும் இவை மேலதிக செல்வங்களாகவே கணக்கிட வேண்டும். என்றே விளங்கமுடிகிறது . 
அஸ்ஸலாமு அலைக்கும்..
ஜகாத்
  மாற்றுமத  சகோதர்களுக்கு கொடுக்கலாமா, புதியதாக  இஸ்லாம் மாறியவர் அவர் உறவினர்ர்களுக்கு கொடுக்கலம்மா  எனக்கு கொஞ்சம் தயவு செய்து விளக்கம் வேண்டும்?   நான் படிசதில் மாற்றுமதம குறிப்பிடவில்லை.
இப்படிக்கு அன்ப்புள்ள
 
சலீம்
  மதினா 
ஜகாத் பெறத் தகுதியுள்ளவர்கள் யார் யார்?
ஜகாத் சட்டங்கள் தொடர் - 8                                        முஸ்லிம்.
 

கடந்த ஏழு தொடர்களில் ஜகாத் யார் கொடுக்க வேண்டும்? எவற்றின் மீது கடமையாகும் போன்ற விபரங்களைக் கண்டோம். ஜகாத் பெற தகுதியானவர்கள் யார் என்பதை இப்போது விரிவாக அறிந்துக் கொள்வோம்.

உலகில் தேவையுள்ளவர்கள் என்று ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தரத்திலிருப்பவர்களல்ல. இவர்களில் நிரந்தர தேவைக்குட்பட்டவர்கள்,
 தற்காலிக தேவையுள்ளவர்கள் என்று வேறுபடுவார்கள். பொருள் வசதியற்றவர்கள் மட்டும் தான் தேவையுடையவர்கள் அந்த வசதியைப் பெற்றவர்களுக்கு எந்த தேவையும் இருக்காது என்றெல்லாம் இஸ்லாம் முடிவு செய்யவில்லை. என்னதான் பொருளாதார வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் சூழ்நிலையால் சில நேரம் அவர்கள் கூட தேவையுள்ளவர்களாகி விடலாம் என்பதால் ஜகாத் பெற தகுதியானவர்களை இஸ்லாம் மிக விரிவாக பட்டியலிட்டுள்ளது.

அவர்கள் எட்டு வகையினர்:

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல் குர்ஆன் 9:60)

1) பரம ஏழைகள்,

2) ஏழைகள்,

3) இந்தப் பணியில் ஈடுபடும் உழைப்பாளர்கள்,

4) இஸ்லாத்தை மனதார விரும்புபவர்கள்,

5) அடிமைகளாக சிறைப்பட்டவர்கள்,

6) கடன்பட்டுள்ளவர்கள்,

7) ராணுவ வீரர்கள்,

8) பயணிகள் (வழிப்போக்கர்கள்)


இந்த எட்டுத் தேவைகளுக்குத் தான் ஜகாத் என்ற பொருளாதார பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா நற்பணிகளுக்கும் ஜகாத் தொகையை பயன்படுத்தலாம் என்ற போக்கு பரவலாக முஸ்லிம்கள் (குறிப்பாக நற்பணியில் ஈடுபடுபவர்களின்) மனங்களில் விரிந்துள்ளன. அதனால் தான் பள்ளிவாசல்கள்,மரதஸாக்கள்,
 திருமணங்கள், இன்னப் பிற நற்பணிகளுக்காக விளம்பரங்கள் - பயான்கள் (பயான்கள் ஜகாத் ஸ்பெஷலாகவே நடக்கும்) வழியாக ஜகாத் திரட்டும் நிலையைப் பார்க்கிறோம். பொதுவாக அனைத்து நற்காரியங்களுக்கும் ஜகாத்தை பயன்படுத்தலாம் என்றால் எட்டு என்ற எண்ணிக்கையையும், அந்த எட்டில் இன்னாரெல்லாம் அடங்குவார்கள் என்ற விளக்கத்தையும் இறைவன் சொல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை. 

ஐந்து நேரத் தொழுகை என்று இறைவன் வரையறுத்து அந்த நேரங்களும் குறிப்பிடப்பட்டு விட்டப் பிறகு எல்லாவித தொழுகைகளும் இதில் அடங்கும் என்று சுன்னத் - உபரி போன்ற தொழுகைகளை எப்படி பர்ளுடன் இணைத்துப் பேச முடியாதோ அது போன்றுதான் இதுவும்.
 

அனைத்து நற்பணிகளுக்கும் ஜகாத்தை பயன்படுத்தலாம் என்ற சிலரது முடிவால் - பிரச்சாரத்தால் - ஜகாத்துடைய தீர்க்கமான நோக்கம் அடிப்பட்டுப் போய்விடுவதை நாம் மறந்து விடக் கூடாது.
 

இறைவன் சொன்ன எட்டுப் பேர்களில் நம்மோடு இரண்டற கலந்து வாழ்பவர்கள் மூன்று வகையினர். 1) பரம ஏழைகள் 2) ஏழைகள் 3) கடன்காரர்கள். இவர்கள் சமூகத்தில் மிகைத்து நிற்கும் போது புதிய மதரஸாக்கள் உருவாகின்றன.
 புதிய பள்ளிவாசல்கள் உருவாவதற்கும், இருக்கும் பள்ளிகளை விஸ்தீரனப்படுத்துவதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்படுகின்றது. 

தெளிவாக சொல்ல வேண்டுமானால் எந்த நோக்கத்திற்காக ஜகாத் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு எந்த நோக்கத்திற்காக ஜகாத் உருவாக்கப்படவில்லையோ அந்த நோக்கத்திற்காக ஜகாத் தொகை பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.
 

யாருக்கு எது தேவையோ அதை நன்கறிந்தவன் இறைவன் மட்டும் தான். அவன் 'இன்னாருக்குத் தான் இந்த தொகை செலவழிக்கப்பட வேண்டும்' என்று பட்டியலிட்டு சொல்லி இருக்கும் போது அதை மாற்றிக் கொள்ளும் உரிமை எவருக்கும் இல்லை என்பதை சம்பந்தப்பட்வர்கள் விளங்க வேண்டும்.
 

இறைவன் யாரைக் குறிப்பிட்டுள்ளானோ அவர்களை செல்வந்தர்கள் கூடுதலாக நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001